×

2 மாணவிகள் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே

வந்தவாசி, ஜூலை 6: வந்தவாசி அடுத்த 2 கல்லூரி மாணவிகள் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி வீட்டின் அருகே தண்ணீர் பிடித்து வருவதற்காக குடத்துடன் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். உறவினர், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தந்தை கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார்.

அதேபோல் மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி அன்று கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். உறவினர், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலு வழக்குப்பதிவு செய்து மாணவி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என விசாரித்து தேடி வருகிறார்.

The post 2 மாணவிகள் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Tags : Vasi ,Vandavasi ,Dinakaran ,
× RELATED 500 மீட்டர் தூரம் சிதறிய கல் தலையில்...